Advertisment

யாஹூ சேவை உபயோகிப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
yahoo-messenger-icon

yahoo-messenger-icon

யாஹூ மெசன்ஜர் உலகின் முதல் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாகும். யாஹூ மெசன்ஜர் சேவை ஜூலை 17-ம் தேதி முதல் இயங்காது என அறிவித்துள்ளது. யாஹூ மெயில் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த யாஹூ ஐடி அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

யாஹூ மெசன்ஜர் செயலி மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூன் 21, 1999-ம் ஆண்டு ரீபிரான்டிங் செய்யப்பட்டது. அந்த வகையில் யாஹூ மெசன்ஜர் ஆப் ஜூலை 17, 2018-இல் நிறுத்தப்படுகிறது.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இதர சாட் செயலிகளின் ஆதிக்கம் காரணாக யாஹூ மெஸ்ஸஞ்சர் சேவையை உபயோகிக்கும் பயணாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த சேவை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓத் நிறுவனம் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெசன்ஜர் சேவையை நிறுத்தியது.

தகவல் பரிமாற்ற வழிமுறைகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் யாஹூ நிறுவனம் ஸ்குரில் எனும் மெசேஜிங் செயலியை சோதனை செய்து வந்தது. அந்த வகையில் இந்த செயலி யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசன்ஜர் செயலியின் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு டவுன்லோடு செய்ய முடியும் என அறிவித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment