வாட்ஸ்அப் செயலியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகில் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ்அப் காலிங், வீடியோ காலிங், பண பரிவர்த்தனை என பல்வேறு அம்சங்கள் இந்த செயலியில் உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனர்களை கவர புதுபுது அம்சங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதேநேரத்தில் தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது. அதுதொடர்பான அப்டேட்களும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், புது அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் கொடுத்துள்ளது. செசேஜ் எடிட் செய்து கொள்ளும் வகையில் 'எடிட் ஆப்ஷன்' (Edit option) அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளது. எழுத்துப்பிழையுடன் யாருக்காவது குறுஞ்செய்தி அனுப்பி விட்டால், அதை அனுப்பியவரே எடிட் செய்து திரும்ப அனுப்பலாம். அந்த வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முன்பு ஒருவருக்கு தவறுதலாக மெசேஜ் அனுப்பி இருந்தால் அந்த மெசேஜை டெலிட் செய்து விட்டு, மீண்டும் புதிதாக டைப் செய்து அனுப்புவோம். ஆனால் எடிட் அம்சத்தில் பழைய மெசேஜை அப்படியே வைத்து தவறை மட்டும் மாற்றி அனுப்பலாம். இப்படி செய்யும்போது, இந்த மெசேஜ் எடிட் செய்யப்பட்டது எனச் சுட்டிக்காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வசதி தற்போது தற்போது பீட்டா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மெசேஜ் அனுப்பிய பின், எவ்வளவு மணிநேரம் வரை அதை எடிட் செய்யலாம் என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
அண்மையில் இதேபோன்று ட்விட்டர் நிறுவனமும் எடிட் ஆப்ஷனை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. முதற்கட்டமாக குறிப்பிட்ட நாடுகள் மற்றும் ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்துவதாக கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil