சென்னை, வேளச்சேரியில் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரி பகுதியில் போதை மாத்திரைகள், விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தன. தனியார் துணை கமிஷ்னர் மகேந்திரன் உத்தரவின் பெயரில் தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகும் வகையில் சிலர் நபர்களை இருப்பதாக போலிசாருக்கு தகவல் வந்ததன் பெயரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 4,400 போதை மாத்திரைகள், 90 டானிக் இருந்தது. இவை வலிகளிக்கு வழங்கப்படும் மருந்துகள். இதை இவர்கள் போதை மருந்தாக மாற்றி இப்பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இதை அடுத்து 5 பேர் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் இருவர் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இந்த மருந்துகளை மருந்தகங்களுக்கு கொடுக்காமல், மறைமுகமாக போதை மருந்தாக மாற்றி விற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil