காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பல சிக்கல் ஏற்படுகிறது. டீ அல்லது காப்பியில் உள்ள காஃபைன் மற்றும் பால் வாயில் உள்ள பாக்டிரியாவை குடலுக்கு அடித்து செல்கிறது. இதனால் அஜீரணம் ஏற்படும். இவை அஜீரணம் மற்றும் ஏற்படுத்தவில்லை குடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
காலை காப்பி அல்லது டீ குடிப்பதால் வயிறு உப்புதல், வலி மற்றும் அல்சர் வலியை அதிகப்படுத்தும். இதற்கு காரணம் டீ மற்றும் காப்பில் இருக்கும் பொருட்கள், நமது வயதில் இருக்கும் ஜீரணனிக்கும் அமிலத்தை பாதிக்கிறது. இதனால் ஏறிவருதல் அல்லது வயிறு உப்புதல் ஏற்படும்.
டீ அல்லது காப்பி குடிப்பதால் உடல் வரட்சி அடையும். டீ குடிக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். நமது உடலில் போதுதிய தண்ணீர் இல்லை என்றால் வரட்சி ஏற்படும்.
சில சத்துகளை உடலை எடுத்துகொள்ள இந்த டீ அல்லது காப்பி விடாது. குறைப்பாக டீயில் உள்ள டானின் என்ற பொருள் நமது உடல் இரும்பு சத்தை உள்வாங்குவதை தடுக்கிறது. மேலும் பல சத்துக்களை உள்வாங்குவதை தடுக்கிறது.
இந்நிலையில் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுதான் சரி என்றும் சுடு தண்ணீர் பாதுகாப்பான தேர்வு என்று கூறப்படுகிறது.