சோயாவ வச்சு இப்படி ஒரு சுவையான தோசை சுடலாம். நீங்களும் தவறாம வீட்டில சமைச்சு பாருங்க.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- 1 கப்
சோயா- 2 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
செய்முறை : அரிசி, சோயா, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி தனியாக ஊற வைக்கவும். இப்போது இதை ஒரு 4 மணி நேரம் ஊறவைத்து தனித் தனியாக அரைக்கவும். தற்போது மூன்று மாவையும் ஒரு சேர கலந்து அதில் உப்பு போட்டு 10 மணி நேரம் அப்படியே விட வேண்டும். தொடர்ந்து இந்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தோசை சுடவும்.