காரம் சாப்பிட்டால் நம் வாய் எரியும் என்பது தினமும் நடக்கிறது. காரம் என்பதை நமது உணவில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் நாம் அடிக்கடி காரம் சாப்பிட்டு விட்டு அவஸ்தைபடுவோம். இந்நிலையில் அதிக காரம் சாப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
எப்போதும் காரம் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. நாம் சாப்பிட்டும் உணவில் தண்ணீரில் கரையாத எண்ணெய் பொருட்கள் இருக்கும். இதனால் தண்ணீர் குடித்தால் அசீரணம் ஏற்படலாம்.
மேலும் இதற்கு பதிலாக பால் குடிக்கலாம். இது அந்த எண்ணெய் பொருட்களை கரைத்துவிடும். இதனால் பால் குடிக்கலாம். அல்லது காரமாக சாப்பிடும் முன்பு தயிர் சாப்பிடுவது நல்லதுதான்.
மேலும் இதுபோல லேசான சூட்டில் டீ குடித்தாலும், அதிக காரம் தெரியாது. ஆனால் அதிக சூடான டீ குடிக்க கூடாது.