நெகிழ்ச்சி வீடியோ: நடக்க முடியாத யானைக்குட்டியை தோளில் சுமந்து தாயிடம் சேர்த்த நபர்

மனிதர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுவதோடு மட்டடுமல்லாமல், விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளும் எல்லா இடங்களிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

மனிதர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுவதோடு மட்டடுமல்லாமல், விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளும் எல்லா இடங்களிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

author-image
WebDesk
New Update

தினந்தோறும் மனிதர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுவதோடு மட்டடுமல்லாமல், விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளும் எல்லா இடங்களிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி எங்கோ மூலையில் மனிதம் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு சம்பவம்தான் ஊட்டியில் சமீபத்தில் நடைபெற்றது.

Advertisment

ஊட்டியில் உள்ள வனப்பகுதியில் வழித்தவறி தாயிடமிருந்து பிரிந்துவந்த யானைக்குட்டி, கால்வாய் ஒன்றில் சிக்கிக்கொண்டது. இதையறிந்து அங்கு வந்த வனத்துறையினர் அதனை மீட்டு தாய் யானையிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், மீட்கப்பட்ட யானைக்கு காலில் காயம் ஏற்பட்ட காரணத்தால், நடக்க முடியாமல் அவதிப்பட்டது. அப்போது வனத்துறையை சேர்ந்த பணியாளர் ஒருவர் சற்றும் யோசிக்காமல், யானைக்குட்டியை தோள்பட்டையில் சுமந்தார்.

தன் தோளிலேயே சுமந்து யானைக்குட்டியை அதன் தாய் யானையுடன் சேர்த்தார். குட்டி யானையை கடினப்பட்டு தாய் யானையிடம் சேர்த்த அந்த வனத்துறை பணியாளரை அங்கிருந்த மக்கள் வெகுவாக பாராட்டினர். அஅவரது பெயர், விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Advertisment
Advertisements

அவர் யானைக் குட்டியை சுமந்துசெல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: