சில நாட்களுக்கு முன்பு, சென்னை ஆர்.ஏ புரத்தில் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும்பாக்கம், நாவலூர், செம்மஞ்சேரி போன்ற நகரின் வெளிப் பகுதிகளில் மாற்று வீடு வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் அங்குள்ள மக்களுக்கு டோக்கன் வழங்கினர். அரசு வழங்கும் அந்த வீடுகளை பார்க்க நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பெரும்பாக்கத்திற்கு செல்ல முடிவு செய்தோம். இங்கு ஒவ்வோரு மாதமும் பராமரிப்பு கட்டணமாக, ரூ.850 செலுத்தி வந்தாலும் கட்டிடங்கள் பராமரிப்பின்றி மோசமாக உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதுபற்றி விரிவாக அலசுகிறது இந்த வீடியோ தொகுப்பு!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.