மார்கழி மாதத்தின் 23 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 23வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.
அந்த பாடல் இதோ...
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.