மார்கழி மாதத்தின் 26வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 26வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.
அந்த பாடல் இதோ..
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே,
சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே;
ஆலின் இலையாய்! அருள் — ஏலோர் எம்பாவாய்.