மார்கழி மாதத்தின் 18 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 18வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.
அந்த பாடல் இதோ...
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.