மார்கழி மாதத்தின் 19 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 19வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.
அந்த பாடல் இதோ...
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்;
தத்துவம் அன்று தகவு — ஏலோர் எம்பாவாய்.