தெலங்கானாவில் பீர் பாட்டில்கள் எடுத்துக் கொண்டு ஓடிய கிராமவாசிகள்: வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் விபத்துக்குள்ளான வேனில் இருந்து பீர் பாட்டிகளை கிராம மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் விபத்துக்குள்ளான வேனில் இருந்து பீர் பாட்டிகளை கிராம மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

author-image
WebDesk
New Update

தெலங்கானா மாநிலத்தில் விபத்துக்குள்ளான வேனில் இருந்து பீர் பாட்டிகளை கிராம மக்கள் எடுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தின் சூரியபேட்டில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் வேமுலப்பள்ளி கிராமம் ஷெட்டிபாலம் சந்திப்பு அருகே வந்த போது, திடீரென கால்நடை ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதனை காப்பாற்ற வேண்டி வாகனத்தை ஓட்டுனர் திருப்பிய போது, எதிர்பாரா விதமாக வாகனம் விபதுக்குள்ளாகியுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், ஓட்டுனரை காப்பாற்றச் சென்றுள்ளனர். ஆனால், காயம் ஏதுமின்றி ஓட்டுனர் தப்பியுள்ளார். எனினும், வாகனம் கவிழ்ந்ததில் அதிலிருந்த பீர் பாட்டில்கள் சாலையில் சிதறியுள்ளது. இதனை கண்ட கிராமவாசிகள், ஓட்டுனரை மறந்து விட்டு பீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

Advertisment
Advertisements

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அப்பகுதியில் குவிந்த கிராமவாசிகளை அப்புறப்படுத்தி விட்டு, மீதமுள்ள பீர் பாட்டில்களை பாதுகாப்பாக வேறொரு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். சுமார் ரூ.50,000 மதிப்புள்ள பீர் பாட்டிகள் கொள்ளை போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Telangana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: