New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/12/aMLh57QOANBWm3kkRKag.jpg)
சனி கிரகத்தைச் சுற்றி மேலும் 100-க்கும் மேற்பட்ட புதிய நிலவுகள் (துணை கோள்கள்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வளைய கிரகமான சனி கிரகத்திற்கு உள்ள துணை கோள்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சனி கோளின் சுற்றுப்பாதையில் குப்பைகள் படிந்த அண்ட மோதல்களின் விளைவாகத் தோன்றி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதேபோல், வியாழன் கிரகத்திற்கு 95 துணை கோள்களும், யுரேனஸ் 28 மற்றும் நெப்டியூன் 16- துணை கோள்களை கொண்டுள்ளன. நியூயார்க் டைம்ஸின் வெளியான அறிக்கையின்படி, சனி கிரகத்தின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட் 128 துணை கோள்களுடன் சேர்த்து அதன் எண்ணிக்கை 274-ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலவுகள் பெரும்பாலும் சில மைல்கள் பரப்பளவில் உள்ள சிறிய பாறைகளே ஆகும். 2,159 மைல்கள் அகலம் கொண்ட பூமியின் நிலவை விட கணிசமாக சிறியவை.
"இது மிகப்பெரிய புதிய நிலவுத் தொகுதி" என்று ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த மைக் அலெக்சாண்டர்சன் கூறினார், அவர் கண்டுபிடிப்பை அறிவிக்கும் ஒரு ஆய்வறிக்கைக்கு பங்களித்தார், இது அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆராய்ச்சி குறிப்புகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த வானியலாளர் மைக் அலெக்சாண்டர்சன், நவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனியின் 100-க்கும் மேற்பட்ட புதிய நிலவுகளைக் கண்டுபிடித்து உள்ளார். அதேசமயம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளுக்கு பெயரிடுவதற்காக பொதுமக்களுக்கு போட்டி ஒன்றை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த துணை கோள்கள் சூரிய மண்டல மோதல்களிலிருந்து குப்பைகளாக இருக்கலாம், மற்றவை சனிக்கும் அருகில் உள்ள நிலவுக்கும் இடையிலான மோதல்களிலிருந்து துண்டுகளாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தப் புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் அதிக நிலவுகளை கொண்ட கிரகத்தில் சனி முன்னிலை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.