New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/06/python-rescue-coimbatore-2025-08-06-18-36-46.jpg)
செங்கல் சூளைக்குள் 'உஸ்... உஸ்...' பதுங்கிய 11 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்பு
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள கணுவாய் கிராமத்தில், செங்கல் சூளைக்குள் பதுங்கியிருந்த 11 அடி நீளமுள்ள ராட்சச மலைப்பாம்பு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
செங்கல் சூளைக்குள் 'உஸ்... உஸ்...' பதுங்கிய 11 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்பு
கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள கணுவாய் கிராமத்தில், செங்கல் சூளை ஒன்றில் 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உலா வந்ததைக் கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
கணுவாய் பகுதி வனத்தை ஒட்டி இருப்பதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்குள் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பயத்தில் அங்கிருந்து விலகிய அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பாம்புகளைப் பிடிப்பதில் திறமையானவரும், வன உயிரின ஆர்வலருமான சாந்தகுமாருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த சாந்தகுமார், அந்த 11 அடி நீளமுள்ள ராட்சச மலைப்பாம்பை மிகவும் லாவகமாகவும், பாதுகாப்பாகவும் பிடித்தார்.
கோவை அருகே செங்கல் சூளையில் 11 அடி மலைப்பாம்பு: பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட பாம்பு பிடி வீரர்!#Coimbatore pic.twitter.com/uzVroqss46
— Indian Express Tamil (@IeTamil) August 6, 2025
பின்னர், அந்தப் பாம்பு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை மீண்டும் அதன் வாழ்விடமான மாங்கரை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர். வனவிலங்குகளைப் பார்த்தால், யாரும் அதைத் தாக்கக் கூடாது என்றும், உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கிச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.