New Update
/indian-express-tamil/media/media_files/GJDiYBD38IM9YXXK2IVs.jpg)
தென்காசியில் தனியார் தொழிற்சாலையில் பதுங்கி இருந்த 15 அடி நீள நாகப்பாம்பு வனத்துறையால் நேற்று மீட்கப்பட்டது.
தென்காசியில் தனியார் தொழிற்சாலையில் பதுங்கி இருந்த 15 அடி நீள ஆண் நாகப்பாம்பு நேற்று (வியாழக்கிழமை) வனத்துறையால் மீட்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிந்தபேரி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பாம்பு பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் அச்சமடைந்து அங்கிருந்து அலறியடித்து வெளியேறினார். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
#WATCH | Tamil Nadu: Forest department rescued a 15 feet long male Cobra from a private factory near Govindaperi under Kadayam municipality of Tenkasi district
— ANI (@ANI) November 16, 2023
(Video Source: Forest department) pic.twitter.com/vExAAV2pbA
தகவலில் பேரில் அங்கு வந்த வனத் துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் காட்டுக்குள் தொலைதூரத்தில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.