வீடியோ: பைக்கில் கையில் பீர் பாட்டிலுடன் ரகளை; கோவையில் 3 பேர் கைது

கோவையில், இருசக்கர வாகனத்தில் கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில், இருசக்கர வாகனத்தில் கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
s

கோவை 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கிச்செல்லும் மேம்பாலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் கையில் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

Advertisment

புகாரின்பேரில் காட்டூர் காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்தினர். மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட ராஜ்குமார், சுசீந்திரன் மற்றும் கௌதம் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

C-1 காட்டூர் காவல் நிலைய குற்ற எண்162/25  U/S 296(b) 308 (4) 351(3) 281 ,129, 177- MV ACT

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: