Advertisment

தோட்டத்தில் பதுங்கி இருந்த 5 அடி நீள அரியவகை பாம்பு பத்திரமாக மீட்பு

பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூர் விவசாய தோட்டத்தில் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள அரியவகை பாம்பை வனத்துறை மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர்.

author-image
WebDesk
New Update
snakc

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பொள்ளாச்சி அமைந்துள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள மஞ்சநாயக்கனூர் பகுதியில் புகழேந்தி என்பவரது தனியார் தோட்டம் உள்ளது. 

Advertisment

தோட்ட வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உள்ளதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு பாம்பு பிடி வீரர் சுரேஷ் புகழேந்தி வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்த போது இந்த பாம்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் அரிய வகை பாம்பு எனவும் இந்த பாம்பின் இனம் மிகவும் குறைவாக உள்ளது எனவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

பின்பு பிடிபட்ட இந்த அரிய வகை பாம்பை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் ஆழியார் அடர்ந்த வனப் பகுதியில் பத்திரமாக வனத்துறையினர் விட்டனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment