New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/03/0UsZLhFOWmhUqUmEHzEk.jpg)
கடந்த 15 நாட்களில் மட்டும் 70 பாம்புகளை பிடித்ததாக கடலூர் பாம்பு பிடிக்கும் நிபுணர் செல்லா குறிப்பிட்டுள்ளார். கோடை காலத்தில் குளிர்ச்சியான பகுதிக்கு பாம்புகள் வரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூரைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நிபுணர் செல்வா, கடந்த 15 நாட்களில் மட்டும் 70 பாம்புகளை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, "கோடை காலத்தில் பெரும்பாலான விஷ பாம்புகள் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே வரத் தொடங்கும். குறிப்பாக, குளிர்ச்சி அதிகமாக இருக்கும் இடங்களுக்கு தான் இத்தகைய பாம்புகள் அனைத்தும் வரும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு வீட்டில் விஷ பாம்பை பிடிக்க நேரிட்டால், அடுத்த 8 மாதத்திற்குள் அதே வீட்டில் மற்றொரு பாம்பை பிடிக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
இதற்காக, கோடை காலத்தில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த 15 நாட்களில் மட்டும் கடலூரில் 70 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வனப்பகுதியில் விடப்பட்டன" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.