'இந்த உலகத்திலேயே பாவம் செய்தது யாரெனில், அது 90's கிட்ஸ் தான்' என்று சொல்லும் அளவிற்கு சமூக தளங்களில் அவர்களின் ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
27 - 33 வயது நிரம்பிய யூத்கள் தான் இன்றைய 90's கிட்ஸ். இணையத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்திருப்பது இந்த குரூப் தான். ஏனெனில், இதில் பாதிக்கும் மேற்பட்டோர் நல்ல வேலை, சம்பளம் என செட்டில் ஆகி, தான் சம்பாதிக்கும் பணத்தில் நெட் கார்டு போட்டு உபயோகிப்பவர்களாக இருக்கின்றனர். ஆகையால், இவர்கள் தான் இன்றைய சமூக தளங்களின் ஒரிஜினல் ஆதிக்கமே!
ஆனால், இவர்களில் பெரும்பாலானோரின் புலம்பல்ஸ் என்பது இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே. 'இன்னமும் என்னைய பச்சப் புள்ள ரேஞ்சுக்கே வீட்டுல ட்ரீட் பண்றாங்கப்பா!' என்பதே இவர்களது முதல் குற்றச்சாட்டு. ஏனெனில், 90's கிட்ஸின் பெற்றோர்கள் தான், இரவு கதை சொல்லும் பழக்கம் கொண்ட கடைசி வம்சாவளி எனலாம். நம் தாத்தா, பாட்டிகளின் சாயம் அவர்களிடம் மட்டும் தான் 70 சதவிகிதம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அதற்கு பிறகு வரும் பெற்றோர்கள் மாடர்ன் கலாச்சாரத்தை ஒட்டி இருப்பதால், அவர்களே ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் என பிசியாகியிருக்கும் சூழலில் எங்கிட்டு இருந்து கதை சொல்றது.
ஸோ, ஆசீர்வதிக்கப்பட்ட கிட்ஸ் என்றால் தான் 90's கிட்ஸ் தான் என்று நாங்கள் சொல்லவில்லை, அவர்கள் சொல்லிக் கொள்வது.
அப்படிப்பட்ட 90's கிட்ஸ்-ன் கல்யாண புலம்பல்கள் குறித்த மீம்ஸ்களை இங்கே பார்ப்போம்,
\