Advertisment

”மார்பக காம்புகளில் ஏன் பாலியல் பேதம்?”: விவாதத்தை கிளப்பிய பாடகியின் பதிவு

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர் அனுஷ்கா மஞ்சண்டா என்பவர் இணைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”மார்பக காம்புகளில் ஏன் பாலியல் பேதம்?”: விவாதத்தை கிளப்பிய பாடகியின் பதிவு

பெண்கள் தங்கள் தோற்றம், நிறம், கருத்தை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக இணைய தாக்குதலுக்கு உள்ளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தீபிகா படுகோனே, ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்களும் இத்தகைய இணைய தாக்குதலிலிருந்து தப்பிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர் அனுஷ்கா மஞ்சண்டா என்பவர் இணைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

Advertisment

பெண்கள் தங்கள் மார்பக காம்புகளை வெளிக்காட்டுவது போன்ற புகைப்படங்களை பதிவிட சமூக வலைத்தளங்கள் தடை செய்துள்ளது. ஆனால், ஆண்கள் அவ்வாறு தங்களின் புகைப்படங்களை பதிவிட தடை இல்லை. இதை எதிர்த்து தன்னுடைய இன்ஸ்டகிராம் அக்கவுண்டில் அனுஷ்கா பதிவிட்டிருந்தார்.

அப்பதிவில், “பெண்களின் மார்பக காம்புகளால் எரிச்சலடைபவர்களுக்கு, ஆண்கள் தங்கள் மார்பகங்களை காட்டுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை.”, என குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்த பதிவால் நெட்டிசன்கள் பலர் அவரை பாலியல் ரீதியாக இணையத்தில் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். அவருடைய புகைப்படத்தை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், தன் புகைப்படத்தை வெளியிட யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை என அனுஷ்கா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment