‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்லும் வழியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், இன்று மாலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை பார்வையிடும் நோக்கில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விமான நிலையத்திற்கு முன்பாக குவிந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mair-3-541697.jpeg)
விஜயின் வருகையை முன்னிட்டு, போலீசார் விமான நிலையத்திற்குள் பொதுமக்கள் நுழைவதை கட்டுப்படுத்தி, 500 மீட்டருக்கு முன்பே தடுப்பு வேலி அமைத்திருந்தனர். இருப்பினும், ரசிகர்கள் பலர் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீற முயற்சித்ததால், பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mair-1-123180.jpeg)
விமான நிலையத்தில் இருந்து திறந்த வாகனத்தில் புறப்பட்ட விஜய், ரசிகர்களை கையசைத்து வாழ்த்தினார். அவரை வரவேற்கும் ரசிகர்கள், மலர்மாலைகளை வீசினர். இதன் போது, சிலர் தடுப்பு கம்பிகளை அத்துமீறி தாண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசார், நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/mair-2-148309.jpeg)
பெருங்குடி அருகே உள்ள அம்பேத்கர் சிலை வரை விஜய் பயணித்த நிலையில், இருபுறமும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது வருகையை உற்சாகமாக வரவேற்றனர். பெருமளவு மக்கள் திரண்டதால், விமான நிலைய வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரளவுக்கு பரபரப்புஏற்பட்டது.