9 வருட காதல்.. நடன இயக்குனரை திருப்பதியில் கரம் பிடித்தார் நடிகை சாந்தினி!

திருமணத்திற்கு இருவீட்டாரும் பச்சைக் கொடிக் காட்ட நேற்று திருப்பதியில் திருமணம்

திருமணத்திற்கு இருவீட்டாரும் பச்சைக் கொடிக் காட்ட நேற்று திருப்பதியில் திருமணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாந்தினி - நந்தா

சாந்தினி - நந்தா

நடிகை சாந்தினி தனது காதலரான டான்ஸ் மாஸ்டர் நந்தாவை திருப்பதியில் நேற்று திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

சாந்தினி - நந்தா காதல்:

‘சித்து +2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி.  அதனைத் தொடர்ந்து, வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார்.

”நான் ராஜாவாக போகிறேன்” படத்தில்   சாந்தினியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.இந்நிலையில் சாந்தினி  பிரபல நடன இயக்குனர் நந்தாவை 9 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

நந்தாவை விஜய் டிவி நடத்தும் நடன போட்டிகளில் அடிக்கடி காணலாம்.  தொடர்ந்து கோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் பச்சைக் கொடிக் காட்ட நேற்று திருப்பதியில் திருமணம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது.

Advertisment
Advertisements

publive-image

.இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 16ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த திருமண ஜோடிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.  இவர்களின் திருமணம் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: