ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய சென்னை இளைஞரை பாராட்டியுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா அந்த இளைஞரைப் பார்க்க வேண்டும் என்றும் அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.
மஹிந்த்ரா குழுமம் நிறுவனங்களின் தலைவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா. புதிய முயற்சிகளை பாராட்டுபவர். தொழிலதிபர்களில் வித்தியாசமானவர். ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். சமூக ஊடகங்களில் எல்லாவற்றுக்கும் உடனடியாக பதிலளிப்பார்.
சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபு
இந்த ஆட்டோ வீடு கடந்த ஆண்டே சமூக ஊடகங்களில் வெளியாகி பிரபலமானதையடுத்து, இந்த ஆட்டோ வீடு முயற்சியை பலரும் பாராட்டினார்கள்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, 1 லட்சம் ரூபாய் செலவில் ஆட்டோவில் வீடு கட்டிய இளைஞர் அருண் பிரபுவைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
Apparently Arun did this to demonstrate the power of small spaces. But he was also on to a larger trend: a potential post-pandemic wanderlust & desire to be ‘always mobile.’ I’d like to ask if he’ll design an even more ambitious space atop a Bolero pickup. Can someone connect us? https://t.co/5459FtzVrZ
— anand mahindra (@anandmahindra) February 27, 2021
ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அருண் இந்த சிறிய இடத்தில் வீடு கட்டி தனது திறமையைக் காட்டியுள்ளர். இவர் ஒரு பெரிய ட்ரெண்டில் இருந்துள்ளார். தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில், பயணம் செய்ய விரும்புபவர்கள் எப்போதும் ஒரு நடமாடும் பயணத்தை விரும்புகின்றனர். அவர் எங்களுடைய பொலிரோ பிக்அப் வாகனத்துக்கு இது போன்ற டிசைனில் வடிவமைக்க கேட்க விரும்புகிறேன். அவரைத் தொடர்புகொள்ள எங்களை யாராவது இணைக்க முடியுமா?” என்று ஆனந்த் மஹிந்த்ரா கேட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்த்ரா ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய அசகாயசூரன் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபுவை பாராட்டி அவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருப்பது சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.