New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/03/kdz6YeqnbQXmpyhzKnZt.jpg)
சீறிப்பாய்ந்த ஆற்றை சிங்கிலாக கடந்த இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் சேதமடைந்த தொங்கு பாலம் வழியாக வெள்ளம் சூழ்ந்த ஆற்றை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீறிப்பாய்ந்த ஆற்றை சிங்கிலாக கடந்த இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
அருணாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பாலங்கள் அடித்துசெல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் சீறிப்பாயும் ஆற்றை, கனமழையால் சேதமான தொங்கு பாலத்தில் தொங்கியபடி இளைஞர் ஒருவர் செல்லும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக அங்குள்ள பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழையால் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மிக ஆபத்தான ஆற்றை, இடிந்த பாலத்தின் வழியாக கடந்து செல்கிறார். அந்த பாலத்தை தாண்டி தண்ணீர் வேகமாக ஓடும் நிலையில், அந்த நபர் தட்டு தடுமாறி ஆற்றை கடக்க முயற்சி செய்கிறார். அவரின் அந்த செயலை கண்டு ஆற்றின் கரையில் இருக்கும் சிலர் அவரிடம் ஏதோ கூறுகின்றனர். ஆனால், அந்த நபரோ ஆபத்தை உணராமல் மெல்ல மெல்ல பாலத்தில் மீது நடந்து செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
ArunachalPradesh receives heaviest Monsoon rains in the world. Got this video of a man crossing traditional hanging bridge in Anjaw district, Arunachal Pradesh near tri-junction of India, China & Myanmar border. Please remain careful & safe. Govt will provide necessary support. pic.twitter.com/GZ9ypeOzZj
— Kiren Rijiju (@KirenRijiju) June 1, 2025
இந்த வீடியோவை மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலக அளவில் அதிக மழையை அருணாச்சல பிரதேசம் எதிர்க்கொண்டுள்ளது. இந்த நபர் மிகவும் ஆபத்தான முறையின் ஆற்றை கடக்கும் வீடியோ எனக்கு கிடைத்தது. பல இடங்களில் பாலங்கள் சேதமாகியுள்ளன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.