New Update
/indian-express-tamil/media/media_files/JALuDvyJ7f1HlPyCWwCh.jpg)
அடல் சேது பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற 56 வயது பெண்ணை 4 காவலர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் இணைந்து துணிச்சலாக காப்பாற்றி உள்ளனர்.
மும்பையில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் டிரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 56 வயதான பெண்ணை 4 காவலர்கள் மற்றும் ஒரு டூரிஸ்ட் கார் டிரைவர் இணைந்து துணிச்சலாக காப்பாற்றி உள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து பெண் நவி மும்பையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஷெல்கர் டோல் நாக்கா செல்லும் சாலையில் உள்ள அடல் சேது பாலத்தின் மீது ஒரு கார் நின்று கொண்டிருப்பதாகவும், பாலத்தின் தடுப்புகளைத் தாண்டி பெண் ஒருவர் நிற்கிறார் என்றும் நவா ஷேவா போக்குவரத்து பிரிவு ரோந்து போலீசாருக்கு அழைப்பு வந்தது.
A 56-year-old woman , attempted to jump off Atal Setu in Mumbai, but was saved by the quick thinking of a car driver and police personnel.
— Raj (@rajmdu82) August 17, 2024
personal salute to the cab driver for his quick reaction.#atalbridge #mumbai #AtalSetu pic.twitter.com/LrcSTkJMRR
இதையடுத்து அங்கு ஒரு குழு உடனடியாக அனுப்பப்பட்டது, குழு அந்த இடத்தை அடைந்தவுடன், பெண் கடலில் குதித்தார். உடனே அந்த கார் ஓட்டுநர் அவரின் தலைமுடியைப் பிடித்து தடுத்தார். தொடர்ந்து அங்கு வந்த 4 கான்ஸ்டபிள்கள் அவரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர், போலீசார் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரீமா பட்டேல் எனத் தெரிய வந்தது. முலுண்ட் என்ற பகுதியில் வசிக்கிறார். அவரின் இந்த செயலுக்கான காரணத்தை புரிந்து கொள்ள போலீசார் முயற்சி செய்து வருகின்றனர் என்று ஒரு அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.