Advertisment

குட்டியை சேர்த்துக் கொள்ளாத தாய் யானை: முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை ஆலோசனை

குட்டி யானையை முகாமிற்கு அனுப்ப வனத்துறை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baby ele.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் பலன் அளிக்காததால் யானையை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக வனத்துறை தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர். 

இதன் இடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத் துறையினர் பராமரித்து வந்த நிலையில் அந்த குட்டி யானை அதன் கூட்டத்துடன் சென்றது. இதனை வனத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில் உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப் பகுதிக்குள் விடப்பட்டது.  

இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது. இந்த  தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற வனத் துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப் பகுதிக்கு கொண்டு வந்தனர். 

குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால் அது தோல்வி அடைந்தது. தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.  இதனால் அதனை மீண்டும் தடாகம் பகுதியில் உள்ள யானைகள் கூட்டத்துடன் சேர்க்க வனத் துறையினர் முடிவு செய்து உள்ளனர். கூட்டத்துடன் சேர்க்க முடியாத பட்சம் யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் பராமரிக்க வனத் துறையினர்  முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment