திடீர் பிரம்மாண்ட பள்ளம்! பாங்காக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை மாயம்; கார்கள் உள்ளே போன அதிர்ச்சி வீடியோ

எக்ஸ் தளத்தில் பயனரால் பதிவேற்றப்பட்ட வீடியோவில், சாலை திடீரென தாழ்ந்து, பின்னர் முழுவதுமாக இடிந்து விழும் அதிர்ச்சியூட்டும் தருணத்தைக் காட்டுகிறது.

எக்ஸ் தளத்தில் பயனரால் பதிவேற்றப்பட்ட வீடியோவில், சாலை திடீரென தாழ்ந்து, பின்னர் முழுவதுமாக இடிந்து விழும் அதிர்ச்சியூட்டும் தருணத்தைக் காட்டுகிறது.

author-image
WebDesk
New Update
bangkok road collapse 2

இந்தப் பள்ளம் சுமார் 30க்கு 30 மீட்டர் அகலம் கொண்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒரு திரைப்படத்தில் சி.ஜி.ஐ தொழில்நுட்பத்தில் ஒரு பேரிடர் காட்சி நடந்தால் எப்படி இருக்குமோ அதே போல, பாங்காக்கில் வியாழக்கிழமை நிஜத்தில் அரங்கேறியது. ஒரு மருத்துவமனைக்கு வெளியே இருந்த சாலையின் ஒரு பெரிய பகுதி திடீரென உள்வாங்கி, ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கியது. அது கார்கள், மின் கம்பங்கள் மற்றும் நீர் குழாய்களை விழுங்கியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி வீடியோக்கள், செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. அதில் தரையானது மெதுவாகத் தாழ்ந்து, பிறகு முழுவதுமாக உடைந்து விழுவதைக் காணலாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அதைப் பதிவு செய்கின்றனர். பாங்காக் போஸ்ட் செய்திப்படி, இந்த பள்ளம் சுமார் 30க்கு 30 மீட்டர் அகலம் கொண்டது. மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் ஒரு பயனரால் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், சாலை தீடீரென கீழே உள்வாங்கி தாழ்ந்து, பிறகு முழுவதுமாக இடிந்து விழும் அச்சுறுத்தும் தருணத்தைக் காட்டுகிறது. இந்த காட்சியின் பேரிடர் உணர்வு பல ஆன்லைன் பயனர்களைத் அதிர்ச்சி அடையச் செய்தது.

வீடியோவைப் பாருங்கள்:

Advertisment
Advertisements

இந்த பதிவின் கீழ், பயனர்கள் நம்பிக்கையின்மை மற்றும் வருத்தம் கலந்த கருத்துக்களைத் தெரிவித்தனர். “பூமி உங்களை முழுவதுமாக விழுங்காத அளவுக்கு நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று ஏன் அங்கு அவ்வளவு நம்பிக்கையுடன் நிற்கிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டார். மற்றொருவர்,  “நாம் இதுவரை இருந்த தலைமுறையிலேயே மிகவும் முட்டாள்தனமான தலைமுறையாக இருக்கலாம், ஒரு வீடியோவைப் பதிவு செய்ய உங்கள் உயிரைப் பணயம் வைக்கிறீர்கள்” என்று எழுதினார்.

“அவர்களில் சிலரின் உயிர் பிழைக்கும் உள்ளுணர்வு 10க்கு ஒருவருக்கு மட்டுமே உள்ளது. நான் ஓட ஆரம்பித்து, என்னால் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க முடியாத வரை ஓடுவேன்” என்று ஒரு ரெட்டிட் பயனர் கூறினார். மற்றொருவர், “இயேசுவே, அது திகிலூட்டுகிறது” என்று எழுதினார்.

சம்பவ இடத்திற்கு பொறியாளர்கள் மற்றும் நகர அதிகாரிகளுடன் வந்த பாங்காக்கின் ஆளுநர் சாட்சார்ட் சித்திபண்ட் (Chadchart Sittipunt), அருகிலுள்ள ஒரு நிலத்தடி ரயில் நிலைய சுரங்கப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணியின் காரணமாகவே இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். மண் சுரங்கப்பாதைக்குள் பாய்ந்து, சுற்றியுள்ள கட்டமைப்புகளை நிலையிழக்கச் செய்து, ஒரு பெரிய நீர் குழாயை உடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள மருத்துவமனை அதன் வெளிநோயாளிகள் சேவைகளை இரண்டு நாட்களுக்கு மூடியுள்ளது. அதன் முக்கிய கட்டிடம் பாதிக்கப்படாமல் தோன்றினாலும், முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் காவல் நிலையத்தையும் மற்றும் அருகே உள்ள கட்டிடங்களில் இருந்தவர்களையும் வெளியேற்றிவிட்டனர். சுரங்கப்பாதை கசிவை மூடி, மண் அசைவைக் கண்காணிக்க ஊழியர்கள் விரைந்து செயல்படும் வேளையில், அப்பகுதியில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தாய்லாந்தின் புதிய பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் (Anutin Charnvirakul), சேதமடைந்த சுரங்கப்பாதை மற்றும் சாலையைச் சீரமைக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்றும், அவரது அமைச்சரவையால் அது அவசரப் பணியாகக் கருதப்படும் என்றும் கூறினார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: