New Update
/indian-express-tamil/media/media_files/KUSaPGw6J8x2WiBF7O7x.jpg)
நீர் நிலைகளில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு, உணவுச் சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்று இருந்தன இந்த நீர் நாய்கள். நீர் நாய்களின் எண்ணிக்கை நீர் நிலைகள் மாசடைதல், சுருங்குதல் மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கத்தால் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை, திருப்பூர் நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பவானி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்து உள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும் சாமண்ணாநீரூந்து நிலையத்தின் பவானி ஆற்று கரைகளில் இன்று நீர் நாய்கள் தென்பட்டன.
பவானியில் ஆற்றில் அரிய வகை நீர் நாய்கள்: மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களிப்பு #viralvideo pic.twitter.com/xa6jmWkfNP
— Indian Express Tamil (@IeTamil) August 29, 2024
அரிய வகை அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்த நீர் நாய்கள் பவானி ஆற்றில் தென்படுவது இதுவே முதல் முறை. புதிதாக தென்பட்ட 10 நீர் நாய்களை அப்பகுதி பொது மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.