Advertisment

பெங்களூருவில் கனமழை: வெள்ளம் சூழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் மீன் பிடித்த மக்கள்: வைரல் வீடியோ

பெங்களூருவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, எலங்கா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள், வெள்ளத்தில் மூழ்கிய அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் மீன்கள் நீந்துவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். கனமழையின் போது அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தன.

author-image
WebDesk
New Update
1 fish bangalore rain

பெங்களூருவில் பெய்த கனமழையால், வெள்ளம் சூழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் மீன்பிடிக்கும் காட்சி (Image source: @dp_satish/X)

பெங்களூருவின் எலங்காவில் வசிப்பவர்கள் இந்த வாரம் பெய்த கன மழைக்குப் பிறகு எதிர்பாராத ஒன்றை எதிர்கொண்டனர்: மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகமான கேந்திரிய விஹாரின் அடித்தளம் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது. அதில், மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. வெள்ளம் சூழ்ந்த பகுதியை வெளியேற்றும் போது குடியிருப்பாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தாங்கள் பிடித்த மீனைப் பெருமையுடன் காட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisment

ஊடகவியலாளர் டி.பி. சதீஷ், “மீன் பிடிக்கச் செல்லுங்கள்! கேந்திரிய விஹார், எலங்கா. பெங்களூரு மழை.” என்று இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அதே பயனர் ஒரு வீடியோவை வெளியிட்டார், அது கேந்திரிய விஹார் எப்படி வெள்ளத்தில் மூழ்கியது என்பதைக் காட்டுகிறது. இது குடியிருப்பாளர்களை தொந்தரவு செய்தது. அந்த பதிவில், “இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம், எலங்காவில் உள்ள கேந்திரிய விஹார் என்ற இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததால் இது மிகவும் பிரபலமானது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பெங்களூரு ஸ்தம்பித்தது. இன்று, பெங்களூருவுக்கு அமைதியான காலையாக இருந்தது. தெளிவான வானம் மற்றும் சூடான வானிலை. இருப்பினும், அக்டோபர் 21-ம் தேதி மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுகள் கணித்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மழையின் போது பெங்களூரு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பெங்களூருவின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார். நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் உறுதியளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bangalore Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment