Advertisment

பிக் பாஸ் வீட்டுக்குள் எச்சில் துப்பும் பவா செல்லத்துரை: இதை மாத்திக்க முடியாதா?

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளரான எழுத்தாளர் பவா செல்லதுறைக்கு துப்பும் பழக்கம் இருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

author-image
WebDesk
New Update
இதை மாத்திக்க முடியாதா?

இதை மாத்திக்க முடியாதா?

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளரான எழுத்தாளர் பவா செல்லதுறைக்கு துப்பும் பழக்கம் இருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Advertisment

பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த முறை எழுத்தாளர் பவா செல்லதுறை போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இந்நிலையில் பவா ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் ஆதரவாகவும் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பவா செல்லதுறை பெரிதாக யாரிடமும் போசுவது போல் காட்டப்படவில்லை. இந்நிலையில் அவர் தினமும் ஒரு கதை சொல்லி வருகிறார். சில கதைகளை ஆர்வமாக போட்டியாளர்கள் கேட்டனர். இந்நிலையில் இவரது கதையை கேட்டு போட்டியாளர் பிரதீப் கண்ணீர் சிந்தினார். இதைத்தொடர்ந்து ‘உங்களை குருவாக நினைக்கிறேன். அதனால் நீங்கள் விரைவில் வெளியேற்றப்படாமல் இருக்க வேண்டும். இதனால் நீங்கள் துப்பும் பழக்கதை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டில் பல இடங்களில் இதை செய்கிறீர்கள் “ என்று அவர் சொன்னார். இந்நிலையில் அது என்னுடைய பிழை, கடவுளே வந்தாலும் என்னுடைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அவர் கூறிவிட்டார். இந்நிலையில் இது பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

 இது தொடர்பாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனது பேஸ்புக் பதிவில், “ மற்றவர்கள் நடுவே நமக்கு எச்சில் துப்ப உரிமை உண்டா?" இதுதான் இப்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸில் முக்கியமான கேள்வி. நண்பர் பவா செல்லத்துரை பிக்பாஸ் வீட்டில் ஆங்காங்கே எச்சில் துப்புவது மற்றவர்களுக்கு பிரச்சினையாகிறது. எச்சில் துப்பக்கூடாது என்கிறார்கள். '  பவா அது என் இயல்பு...யாருக்காகவும் மாத்திக்கமாட்டேன் " என்கிறார். " மற்றவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் இயல்பை கொஞ்சம் மாத்திக்க முடியாதா?"  என்று கேட்கிறார்கள். " அதெல்லாம் கான்ஷியஸா மாறாது... அன்கான்ஷியஸ்ஸாதான் மாறும்"  என்கிறார். மற்றவர்கள் நடுவே எச்சில் துப்பக்கூடாது என்பதெல்லாம்.ஒரு சிவிக் சென்ஸ்தானே...இதுல என்ன மாத்திக்க முடியாத பெரிய  இயல்பு இருக்கிறது என்பது குழப்பமாக இருந்தது. எல்லோரும் எல்லாவற்றையும் இது என் இயல்பு..மாத்திக்கமாட்டேன் என்று சொல்ல ஆரம்பித்தால்  என்னாவது?

மற்றபடி இன்று பவாவை அவர் கதைக்காக மொத்த கும்பலும் ராகிங் செய்துகொண்டிருக்கிறார்கள். பவா இந்த மாதிரி ஒரு மக்குக்கும்பலுக்கு வாழ்நாளில் கதை சொல்லியிருக்க மாட்டார். " ஜெயகாந்தன் என்று ஒருத்தர்.." என்றெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு.

பவா ஒரு பொண்ணுகிட்ட 'உன் வயசில் எனக்கு தமிழ்நாடு முழுக்க ஆயிரம் ரசிகைகள் இருக்காங்க" என்கிறார். இதில் எனக்கு ஒரு டிஸ்ப்யூட் இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment