New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/08/Tahs9q3AGlJwFpGy2y7Q.jpg)
ஓடும் ரயிலுக்குள் பைக் ஓட்டிச் சென்ற நபர்-அதிர்ச்சி காட்சி!
பீகாரின் பாட்னாவில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்குள் பைக் ஓட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பகிர்ந்து ரயில்வே அமைச்சகத்தை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஓடும் ரயிலுக்குள் பைக் ஓட்டிச் சென்ற நபர்-அதிர்ச்சி காட்சி!
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆபத்தை உணராமலும், சமூக பொறுப்புடன் செயல்படாமலும் இளைஞர்கள் வீடியோ எடுத்து வருகின்றனர். ஓடும் பயணிகள் ரயிலில் இளைஞர் ஒருவர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளைஞர் எந்த பயமும் இன்றி ரீல் செய்கிறார்.
பீகாரின் பாட்னாவில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்குள் பைக் ஓட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பகிர்ந்து ரயில்வே அமைச்சகத்தை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கேள்வி என்னவென்றால், ரயிலில் எப்படி பைக்கை எடுத்துச்செல்ல முடியும்? அவரை ரீல் செய்ய அனுமதித்தது யார்? வீடியோ வைரலானதை அடுத்து, ரயிலில் உள்ள பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆரா ரயில் நிலையத்தின் போஸ்ட் கமாண்டர் தீபக் குமார், இந்த வைரல் வீடியோ தனக்கும் வந்துள்ளது என்று கூறினார். அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையில் இந்த வீடியோ உண்மை என்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், அது உண்மையாக இருந்தால் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.