New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/27/aQoLURSmMPQLJReUphL5.jpg)
ஃபோர்ப்ஸ் இதழின் படி, 5.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய வேம்பு, இவ்வளவு காலம் இந்த பிரபலமான சிற்றுண்டியை சுவைக்காமல் விட்டது ஆச்சரியமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்திய பில்லியனரும், ஸோகோ நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு மும்பையின் பிரபலமான தெரு உணவான வடா பாவை முதன்முறையாக சுவைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டார்.
ஃபோர்ப்ஸ் இதழின் படி, 5.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய வேம்பு, இவ்வளவு காலம் இந்த பிரபலமான சிற்றுண்டியை சுவைக்காமல் விட்டது ஆச்சரியமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சமீபத்தில், இந்திய பில்லியனரும், ஸோகோ நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு மும்பையின் பிரபலமான தெரு உணவான வடா பாவை முதன்முறையாக சுவைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டார்.
அந்தப் புகைப்படத்தில் அவர் மும்பை நகரில் ஒரு உள்ளூர் சிற்றுண்டி கடையின் முன் நின்று கொண்டு வடா பாவை கையில் வைத்திருக்கிறார். ஃபோர்ப்ஸ் இதழின் படி, 5.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய வேம்பு, இவ்வளவு காலம் இந்த பிரபலமான சிற்றுண்டியை சுவைக்காமல் விட்டது ஆச்சரியமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அவர் தனது பதிவில், "மும்பையில் வடா பாவை ரசிக்கிறேன். வாழ்க்கையில் இதுவே முதல் முறை. இவ்வளவு காலம் இதை எப்படி தவறவிட்டேன் பாவ்," என்று எழுதியிருந்தார்.
ஸ்ரீதர் வேம்புவின் பதிவை இங்கே பார்க்கவும்:
மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த பதிவு விரைவாக வைரலானது. பல சமூக ஊடக பயனர்கள் வேம்பு முதன்முறையாக வடா பாவ் சாப்பிடுவது குறித்து ஆச்சரியம் தெரிவித்தனர். ஒரு பயனர், "வாவ்! முதல் முறையா? இத்தனை வருஷத்துலயா? அடப்பாவி," என்று எழுதினார். மற்றொரு பயனர், "எனக்குப் பிடித்த சிற்றுண்டி - மும்பை வடா பாவ். இதற்கு ஈடு இணை வேறு எங்கும் இல்லை. எனக்கு இப்போதே நா ஊறுகிறது," என்று கருத்து தெரிவித்தார்.
மூன்றாவது பயனர் ஒருவர், "உங்களுக்கு இது பிடித்திருந்ததா? மகாராஷ்டிர உணவு மிகவும் எளிமையானது. வடை பாவ் பொரித்த எண்ணெயில் மிஞ்சிய நொறுக்குத் தீனிகளில் இருந்து சட்னி செய்கிறார்கள். இது வயிறு நிரம்பவும் சுவையாகவும் இருக்கும்," என்று கூறினார். நான்காவது பயனர், "இது கோடைக்காலத்தில் பேரின்பம்," என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு முன்பு, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மற்றும் Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மா போன்ற பிற பிரபலங்களும் மும்பைக்கு வந்திருந்தபோது வடா பாவை சுவைத்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில், ஆப்பிள் ஸ்டோர் பி.கே.சி மற்றும் ஆப்பிள் ஸ்டோர் சாகேத் திறப்பு விழாவிற்காக இந்தியா வந்திருந்தபோது, குக் பி.கே.சி ஸ்டோர் திறப்பதற்கு முந்தைய நாள் தென் மும்பையின் தார்தியோ பகுதியில் உள்ள பிரபலமான சைவ உணவகத்தில் நடிகை மாதுரி தீட்சித்துடன் வடா பாவ் சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியானது.
2024 ஆம் ஆண்டில் தனது இசை நிகழ்ச்சிக்காக மும்பை வந்திருந்த பிரையன் ஆடம்ஸ் கூட இந்த நகரத்தின் பிரபலமான வடா பாவை சாப்பிட்டார். அவர் அதை "மிகவும் சுவையான சைவ தெரு உணவு... ரொம்ப நல்லா இருக்கு!" என்று வர்ணித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.