New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/07/jfM8T7R1xW7QTDaPCO1d.jpg)
பேருந்தை காட்டெருமை தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ சுற்றுலா பயணிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி, சிறுத்தை, வரையாடு, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக அடர் வனத்தை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வரும்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் சென்ற கேரள அரசு பேருந்தை டாப்ஸ்லிப் அருகே காட்டெருமை ஒன்று தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நேற்று முன்தினம் இதே பகுதியில் டாப்ஸ்லிப் அருகே பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் சாலையில் உலா வந்த காட்டெருமையை வீடியோ பதிவு செய்த போது பயணிகளை காட்டெருமை தாக்க முற்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பதிவானது.
காட்டெருமை தாக்கியதில் கேரள அரசுப் பேருந்து சேதம்: வைரல் வீடியோ#Bus | #Bison pic.twitter.com/C99M4fivnq
— Indian Express Tamil (@IeTamil) December 7, 2024
இந்நிலையில் இன்று டாப்ஸிப் அருகே கேரள அரசு பேருந்தை, காட்டெருமை தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ சுற்றுலா பயணிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.