போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்; தாய்லாந்தில் விநோதம்!

தாய்லாந்தில் காணாமல் போன பூனையைத் தேடி கண்டுபிடித்த போலீஸார், பின்னர் அதனை கைது செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பூனையை கைது செய்தது ஏன்? என்ன நடந்தது பார்க்கலாம்.

தாய்லாந்தில் காணாமல் போன பூனையைத் தேடி கண்டுபிடித்த போலீஸார், பின்னர் அதனை கைது செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பூனையை கைது செய்தது ஏன்? என்ன நடந்தது பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
cat arrested

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்; தாய்லாந்தில் விநோதம்!

வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் வரிசையில் பூனை நிச்சயம் இடம்பெறும். அப்படி தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் தான் ஆசைஆசையாக வளர்த்த ஷார்ஹேர் வகையை சேர்ந்த நுப் டாங் என்ற பூனையைத் தொலைத்த உரிமையாளர் ஒருவர், தனது பூனையை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் ஒன்றினை அளிக்கிறார்.

Advertisment

இந்தநிலையில், வீதிகளில் தனியாக சுற்றித் திரிந்த நுட் டாங்கை கண்ட ஒருவர், மே 9-ம் தேதியன்று தனது அருகிலிருந்ந்த காவல்நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார். அழகாக உடை அணிந்து பார்ப்பதற்கு க்யூக்டாக இருந்த பூனை நுட் டாங்கை அங்கிருந்த போலீசார் செல்லம் கொஞ்ச ஆரம்பித்துள்ளனர். அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் பிறாண்டி தாக்கியுள்ளது. இதனையடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

publive-image

அதாவது மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களைத் தாக்கியதாக கூறி அந்த பூனை மீது போலீசார் வழக்குப்பதிவுச் செய்தனர். மேலும் , அழகாக அந்த பூனை கொடுத்த போஸ் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்த காவல்துறை அதிகாரி பக்கீசுக், “இந்த பூனை காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய குற்றத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த பதிவை பூனையின் உரிமையாளர் கண்ணில் படும்வரை பகிரவும். அவர் வந்து ஜாமினில் எடுத்தால்தான் பூனையை விடுவிக்க முடியும்.” என்று நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.

குற்றவாளியின் இடத்தில் பூனையும், அதற்கு ஜாமின் பெறுவது போல் உரிமையாளர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதனை புகைப்படம் எடுத்த போலீசார் சமூகவலைதளத்தில் பதிவிட அது வைரலாகி லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்றுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும், அந்த பூனை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும், தனக்கு அந்த பூனை வேண்டுமென்றும் பதிவிடத் தொடங்கினர். ஆனால், பூனையின் உரிமையாளரிடம் மட்டுமே பூனை ஒப்படைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் வினோதம்:  போலீசாரை தாக்கிய பூனை கைது... ஜாமினில் எடுத்த உரிமையாளர்

அடுத்தநாளே பூனையின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு விரைந்து பூனையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர்களிடம் பூனையை ஒப்படைக்கும் முன்னர் போலியாக எப்.ஐ.ஆர். பதிந்து பூனையை கைது செய்வதுபோல் நடித்தபோலிஸார் மன்னிப்பு கடிதம் ஒன்றினை எழுதும்படி தெரிவித்துள்ளனர். அந்த கடிதம் பூனை எழுதியதுபோல இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதில், "எனக்கு பசியாக இருந்தது. யாரையும் கடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ” என்று பூனை கூறுவது போல எழுதப்பட்டு இருந்தது. 

பொலிஸாரிடம் கைவரிசையை காட்டி கைதான பூனை- பிணையில் விடுதலையாம்.. நடந்தது என்ன? | Cat Arrested For Police In Thailand Released Bail

மேலும், "இந்த வழக்கை முறையாகக் கையாள வேண்டும். மக்களைக் கடிப்பதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும் பூனைகளை நாம் வைத்திருக்க முடியாது" என்று நகைச்சுவையான குறிப்புடன் பக்கீசுக் பூனையை அதன் உரிமையாளரிடம் கொடுத்தார். மேலும், இவை அனைத்தையும் ஒப்புக்கொண்டதன் அடையாளமாக பூனை கடிதத்தில் ரேகை வைப்பதுப்போல எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: