Advertisment

தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு: சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு கடந்த 13 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு கடந்த 13 ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

Advertisment

 இதனை அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர் முகமது ஆசிக் என்பவர் பார்த்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரியின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அடிபட்ட இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

 அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் மேலும் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.அப்போது பேருந்து ஒன்று அவர் மீது ஏறி இறங்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது.

 இதை அடுத்து அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் மீது ஏறி இறங்கிய பேருந்து சாம் டிராவல்ஸ் என்பதும் அந்த பேருந்து தினசரி பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.இதை அடுத்து பேருந்து ஓட்டுனர் சிவராஜ் என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பேருந்து அந்த நபர் மீது ஏறி இறங்கும்  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment