Advertisment

சென்னை கடற்கரையில் இரவில் நடந்த அதிசயம்... நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்; வைரல் வீடியோ

சென்னை கடற்கரையில் இரவு நேரத்தில் பயோ இலுமின்சென்ஸ் என்ற உயிரி ரசாயன எதிர்வினையால் அலைகள் ஒளிர்ந்த வியப்பூட்டும் அதிசய நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
bioiluminescense

பயோலுமினென்சென்ஸ் என்பது ஒரு உயிரி இரசாயன எதிர்வினையால் உருவாகும் ஒரு இயற்கை நிகழ்வு (Image source: @gemsofbabus_X)

சென்னையில் கன மழை பெய்த சில நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) கடற்கரையில் ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வைக் கண்டனர். நீல நிற பயோலுமினசென்ட் அலைகளின் அரிய காட்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பயனர்களை திகைக்க வைத்துள்ளது.

Advertisment

ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் இந்த அரிய அதிசய நிகழ்வின் காணொளியைப் பகிர்ந்துள்ளார். “நான் இப்போது இ.சி.ஆர் கடற்கரையில் மயக்கும் ஃப்ளோரசன்ட் அலைகளை ரசித்தேன்!!” அவர் குறிப்பிட்டிருந்தார்.

அலைகள் ஒளிர்ந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோவைப் பார்ப்பதற்காக எக்ஸ் தளத்தில் பல பயனர்கள் குவிந்ததால், 24,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. "ஆஹா இது அற்புதம்" என்று ஒரு பயனர் எழுதினார். 

“நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம், கடற்கரைகள் மட்டுமே எனக்கு தோள் கொடுக்கின்றன” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார். 
 
“சென்னையில் உள்ள பாலவாக்கம் கடற்கரையில் இரவு 10:30 மணியளவில் எனது நண்பர்களுடனும் எனது பூனையுடனும் இதை நான் பார்த்தேன்.. அடடா.. அதுவே சிறந்த தருணம், என் பூனையின் கண்கள் கூட மின்னியது” என்று மூன்றாவது பயனர் பதிலளித்தார்.

பயோலுமினசென்ட் தண்ணீருக்கு என்ன காரணம்?

நேஷனல் ஜியோகிராஃபிக் படி, பயோலுமினென்சென்ஸ் என்பது ஒரு உயிரினத்திற்குள் ஒரு இரசாயன எதிர்வினையால் உருவாகும் இயற்கையான நிகழ்வு ஆகும். பெரும்பாலான பயோலுமினசென்ட் உயிரினங்கள் கடலில் காணப்படுகின்றன. இந்த பயோலுமினசென்ட் கடல் இனங்களில் மீன், பாக்டீரியா மற்றும் ஜெல்லி ஆகியவை அடங்கும். பயோலுமினசென்ட் ஒளியின் தோற்றம் அது காணப்படும் வாழ்விடம் மற்றும் உயிரினத்தைப் பொறுத்து வேறுபடுகிறது.

பயோலுமினென்சென்ஸின் செயல்பாடுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், தேசிய பெருங்கடல் சேவையின் படி, கடல் உயிரினங்கள் பொதுவாக வேட்டையாடுபவர்களை எச்சரிக்க அல்லது தவிர்க்க, கவரும் அல்லது இரையைக் கண்டறிதல் மற்றும் அதே இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே தொடர்புகொள்வதற்கு உயிரியலைப் பயன்படுத்துகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment