Advertisment

கழிவு நீர் கலந்த குடிநீர் வழங்கிய கல்லூரி?: விடுதி மாணவர்கள் போராட்டம்

மேலும் கடந்த 5 நாட்களாக மிகவும் அசுத்தமான குடிநீர் வழங்கி வருவதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு விடுதி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்

author-image
WebDesk
New Update
dirt water.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை எட்டிமடை பகுதியில் அமிர்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் அங்கு உள்ள விடுதியில் தமிழகம், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக குடிநீர் அப்பகுதியில் சரிவர விநியோகம் இல்லை என்றும் மேலும் கல்லூரிக்கு வரும் குடிநீர் கழிவு நீர் கலந்து வருவதாகவும் மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.  

 

மேலும் கடந்த 5  நாட்களாக மிகவும் அசுத்தமான குடிநீர் வழங்கி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு மாணவர்கள் கல்லூரி பொருள்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் அந்த குடிநீர் குடிப்பதால் பல்வேறு நோய்கள் பரவுவதாகவும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment