Advertisment

அதிகாலையில் அச்சுறுத்திய பாகுபலி காட்டு யானை… வனப் பகுதியில் விட்டுவிட பொதுமக்கள் வலியுறுத்தல்!

கோவையில் கிராமத்திற்குள் அதிகாலை 6 மணிக்கு பாகுபலி காட்டு யானை புகுந்த நிலையில், அதனை வனப்பகுயில் விட்டுவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
coimbatore: Baahubali wild elephant threatens people Tamil News

coimbatore - Baahubali wild elephant

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் பாகுபலி காட்டு யானை அவ்வப்போது வந்து செல்ல கூடிய நிகழ்வாக மாறியுள்ளது. மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டுயானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் அதனை அடர் வனத்தினுள் விரட்ட வலியுறுத்தி வருகின்றனர்.

பாகுபலி யானையை வனத்துறையினரை என்னதான் விரட்டினாலும் இது என் ஏரியா என்ற நினைப்புடன் தொடர்ந்து தான் வந்து செல்லும் பாதையாகவே சமயபுரம் சாலையை பயண்படுத்தி வருகிறது.நெல்லிமலை வனப்பகுதிக்கும் கல்லார் வனப்பகுதிக்கும் இடையே செல்ல இந்த சமயபுரம் கிராம சாலை வழியாக வருவதை காட்டுயானை வழக்கமாக கொண்டுள்ளது .

இருப்பினும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடமாடி வந்தாலும் இதுவரை இந்த காட்டுயானை பாகுபலி மனிதர்களை தாக்கியதில்லை. மேலும் நேற்று இரவு நெல்லிமலையில் இருந்து சமயபுரம் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு யானை பாகுபலி இன்று அதிகாலையில் சமயபுரம் வழியாக மீண்டும் நெல்லி மலைக்கு சென்றது. பொதுமக்கள் அதிகாலையில் செல்வதை கண்டு அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் விரைவில் இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Elephant Viral Social Media Viral Coimbatore Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment