வீடியோ: இரும்பு கேட்டை தகர்த்த "பாகுபலி" யானை; பயிர்கள் கடும் சேதம்- விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கவின் கார்டன் அருகே 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பாக்குத் தோட்டத்தில் புகுந்த பாகுபலி என்ற காட்டு யானை பயிர்களைச் சேதப்படுத்திவிட்டு சென்றது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கவின் கார்டன் அருகே 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பாக்குத் தோட்டத்தில் புகுந்த பாகுபலி என்ற காட்டு யானை பயிர்களைச் சேதப்படுத்திவிட்டு சென்றது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
s

கோவை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த யானை பகல் வேளைகளில் வனப் பகுதிக்குள்ளும், இரவு வேளைகளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. இந்த காட்டுயானையை பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என மக்களும், விவசாயிகளும்,விவசாய சங்கங்களும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை இல்லை.

Advertisment

இந்நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் கவின் கார்டன் அருகே உள்ள திருமலைராஜா என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு தோட்டத்தில் புகுந்துள்ளது. அப்போது, தோட்டத்தின் முன்பகுதியில் இருந்த காம்பவுண்ட் கேட்டை உடைத்து தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

பின்னர், அங்கிருந்த சில பாக்கு மரங்களை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த மற்றொரு தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து, பாகுபலி யானையின் தாக்குதலால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பொருட்கள் சேதமாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: