விபத்தில் கோவை இளைஞர் உயிரிழப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Accident CCTV

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

கருமத்தம்பட்டி, சோமனூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகனான தினேஷ்குமார், சம்பவத்தன்று தனது பழைய வீட்டிலிருந்து காடுவெட்டி பாளையத்தில் உள்ள புதிய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அன்னூர் சாலையில் பயணித்தபோது, அருகே உள்ள ஒரு கடையை மூடிவிட்டு திரும்பிய மற்றொரு இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராத விதமாக மோதல் ஏற்பட்டது.

இதில் நிலை தடுமாறி சாலையில் வீசப்பட்ட தினேஷ்குமார் மீது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று ஏறிச் சென்றது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் உயிரிழந்தார்.

இந்த கோர விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரைக் கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements
accident

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: