New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/15/eSgjoanaoclEqRpv0JJz.jpg)
கோவையில் நாய்களை துரத்திக்கொண்டு ஓடும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றனர்.
கோவை, சோமையனூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்தது. மேலும் சிறுத்தைகளின் நடமாட்டமும் இருந்தது. அப்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகளை ஆடு, மாடு, கன்றுகள், நாய்கள் மற்றும் கோழி போன்ற கால்நடைகளை வேட்டையாடி சென்றன.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத் துறையினர் மர்ம விலங்கு என ஆய்வு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு உள்ள வனப் பகுதியில் சிறுத்தைகள் நடமாடிய செல்போன் வீடியோ காட்சிகள் அப்பகுதி பொதுமக்கள் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து வன துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை வைத்தும், கூண்டுகள் வைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தென்படாத சிறுத்தை மீண்டும் இன்று இரவு 8.30 மணிக்கு தடாகம் அருகே உள்ள சோமையனூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் நாய்களை துரத்திக் கொண்டு வேட்டையாட வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள சுதர்சன், வாணி என்பவர் வீட்டின் முன் இருந்த நாய்களை துரத்திக் கொண்டு வீட்டு காம்பவுண்ட் கேட்டுக்குள் நுழைந்தது.
மேலும் அங்கு இருந்த நாய் ஒன்றை கவ்வி கொண்டு செல்ல முயன்றது. சிறுத்தை பிடியில் இருந்து நாய் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்து தப்பி சென்றது. இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் சிறுத்தை நுழைந்து அங்கு உள்ள நாய்களை வேட்டையாட முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நாயை துரத்தி கொண்டு வந்த சிறுத்தை: 'கதவை சாத்து' என அலறிய குடும்பத்தினர்- வீடியோ வைரல்#coimbatore #Cheetah pic.twitter.com/o2fxoiqFJq
— Indian Express Tamil (@IeTamil) June 15, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.