வைரல் வீடியோ: அடைகாத்த கோழியை கொன்று முட்டைகளை விழுங்கிய நாகப் பாம்பு

கோவையில் கோழிக் கூண்டில் முட்டைகளை அடைகாத்த கோழியை கொன்று அதன் முட்டைகளை நாகப் பாம்பு விழுங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் கோழிக் கூண்டில் முட்டைகளை அடைகாத்த கோழியை கொன்று அதன் முட்டைகளை நாகப் பாம்பு விழுங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
snake.jpg

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் கோழி கூண்டுக்குள் நேற்று இரவு (நவ.29) ஒரு பாம்பு புகுந்தது. கோழி கூண்டில் முட்டை அடைகாக்க வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த கோழியை நாகப் பாம்பு கொத்தியது. 

Advertisment

கோழிக்கு விஷம் ஏறிய நிலையில் கோழி பரிதாபமாக உயிரிழந்தது.  அடையில் இருந்த முட்டையை விழுங்கிய நாகப் பாம்பு அங்கேயே படுத்து ஓய்வெடுத்தது. 

இதுகுறித்து பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீனுக்கு தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்த ஸ்நேக் அமீன் பாம்பை மீட்டார். அப்பொழுது பாம்பை எப்படி கையாள்வது என்றும் பாம்பை எவ்வாறு சாக்கில் போடுவது என்றும் உரிய முறையில் சாக்கை கட்டுவது எப்படி என்பது குறித்தும் பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வனத் துறை ஊழியர்கள் முன்னிலையில் பாம்பு மதுக்கரை வனப் பகுதியில் விடப்பட்டது. 

Advertisment
Advertisements

இதுபோன்று பாம்புகள் வரும்பொழுது கவனமாக கையாளும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: