/indian-express-tamil/media/media_files/2025/01/21/05AgsTR46gR0iCQcyBIa.jpg)
கோயம்புத்தூர் சங்கனூர் பகுதியில் கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி வீடு மற்றும் ஓட்டு வீடு இடிந்து விழும் பதபதைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சங்கனூர் கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டு மாடி கொண்ட வீடு நேற்று இரவு கால்வாய் தூர்வாரும் பணியின் போது தரைமட்டமாக இடிந்து விழுந்துள்ளது.
அதே போல அருகில் இருந்த ஓட்டு வீடும் இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டின் உள்ளே யாரும் இல்லாதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.அருகில் இருந்தவர்கள் வீடு இடியும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
தற்போது சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை: மண் அரிப்பால் ஓடைக்குள் சரிந்த கான்கிரீட் வீடு... வைரலாகும் வீடியோ!!!#Coimbatore#housecollapsed#VIDEOpic.twitter.com/OcqTXrjtzF
— Indian Express Tamil (@IeTamil) January 21, 2025
கால்வாய் அருகே வீடு கட்டப்பட்டு இருந்ததால் மாநகராட்சி இன்னும் அந்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
மண்ணரிப்பு காரணமாக வீடுகள் சரிந்து விழுந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.