New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-15T144422.760.jpg)
கடந்த 4 மாதங்களாக கல்வித்துறை தொடர்பான பல்வேறு பணிகளை செய்து வந்தார். ஆய்வு கூட்டங்கள், பள்ளிகளுக்கு நேரடி விசிட் செய்து வந்தார் சுமதி.
திரைப்பட பாடல் பாடி பணிமாறுதல் விடைபெற்ற முதன்மை கல்வி அலுவலர் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 4 மாதங்களாக கல்வித்துறை தொடர்பான பல்வேறு பணிகளை செய்து வந்தார். ஆய்வு கூட்டங்கள், பள்ளிகளுக்கு நேரடி விசிட் செய்து வந்தார் சுமதி.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் கோவைக்கு இடமாறுதல் செய்யப்பட்டு வந்தார். கடந்த 4 மாதங்களாக கல்வித்துறை தொடர்பான பல்வேறு பணிகளை செய்து வந்தார். ஆய்வு கூட்டங்கள், பள்ளிகளுக்கு நேரடி விசிட் செய்து வந்தார்.
கடந்த வாரம் இவர் திடீரென ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிட்டது. இவரின் மீது சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டுதான் இந்த பணியிடை மாற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.
பணிக்கு வந்து சில மாதங்களே கோவையில் பணியாற்றிய முதன்மை கல்வி அலுவலர் சுமதி, பணி விடைபெற்று செல்ல உள்ள நிலையில் தனது சக ஊழியர்களின் முன்பு ‘ரத்த திலகம்’ திரைப்படத்தில் வரும் ‘‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே, பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்’’ என்ற பாடலை பாடி விடைபெற்றார். ஊழியர்கள் முன்பு அவர் பாடிய பாடல் பற்றிய வீடியோ சமூக வளைத்தலங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
#VIDEO || 'பசுமை நிறைந்த நினைவுகளே'... பிரியாவிடை நிகழ்வில் திரைப்பட பாடல் பாடிய முதன்மை கல்வி அலுவலர்!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | 📹 @rahman14331 pic.twitter.com/c9V6Wa20m4
— Indian Express Tamil (@IeTamil) August 15, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.