வீட்டுக் கூரையை இடித்து தள்ளிய யானை; பயத்தில் அலறிய மக்கள்: வைரலாகும் வீடியோ

கோவை, தொண்டாமுத்தூர் அருகே மலை கிராமத்தில் ஒற்றை தந்தம் கொண்ட யானை வீட்டு கூரையை இடித்து தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் அருகே மலை கிராமத்தில் ஒற்றை தந்தம் கொண்ட யானை வீட்டு கூரையை இடித்து தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Cbe elephant issue

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடிகள் மலை கிராமத்தில் வசித்து வரும் குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டு கூரையை, ஒற்றை தந்தம் கொண்ட யானை இடித்து தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானையின் ஆக்ரோஷமான நகர்வை பார்த்த அப்பகுதியினர் "ஐயோ... உள்ளே போ... உள்ளே போ..." என அலறிக் கூச்சலிடும் சத்தம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Advertisment

வீட்டின் அருகே யானை வந்தபோது அப்பகுதியில் யாரும் இல்லாததால் வேறு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. வீட்டின் கூரை மட்டுமே சேதப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

 

Advertisment
Advertisements

 

பொதுவாக வறட்சிக் காலங்களில் ஊருக்குள் உலா வரும் யானைகள், தற்போது மழைக் காலத்திலும் கிராமத்திற்குள் நுழைவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் ஊருக்குள் வராதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: