New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/27/iz5NZVob8RcCEAjXoIzA.jpg)
கோவையில், தாயை இழந்த குட்டியை சேர்க்க யானைகள் கூட்டம் மறுக்கின்றன. எனினும், குட்டியை யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், தாய் யானை உயிரிழந்த நிலையில் அதன் குட்டியை யானைகள் கூட்டத்துடன் சேர்ப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் அருகே வரப்பாளையம் பகுதியில் பெண் யானை ஒன்று சடலமாக கண்டடெக்கப்பட்டது. அதே பகுதியில் உள்ள விளை நிலத்தில் இருந்து, இந்த யானையின் குட்டியும் மீட்கப்பட்டது. பிறந்து சுமார் ஒரு மாதமே ஆன இந்த குட்டியை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
குறிப்பாக, பொன்னூத்தம்மன் கோயில் அருகே முகாமிட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டத்துடன், இந்தக் குட்டியை சேர்க்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால், குட்டியை சேர்த்துக் கொள்ள யானைக் கூட்டம் மறுத்தது.
தொடர்ச்சியாக முயன்றும் யானைகள் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க முடியாததால், இதற்கான தீர்வு காண உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், குட்டி யானை சுறுசுறுப்பாக நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.