New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/08/vTYP8vrd4DllxMfpSU7o.jpg)
கோவையில், உணவு தேடி கிராம பகுதிக்குள் உலா வந்த காட்டு யானையை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவையில், உணவு தேடி கிராமப்புற பகுதிகளில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையின் வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி அடிவாரப் பகுதிகளான சாடிவயல், குற்றாலம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால், கோவை குற்றாலம் மற்றும் மலை கிராமங்களின் வாகன சோதனை சாவடி மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டு, மீண்டும் காலை 7 மணிக்கு திறக்கப்படும். இந்நிலையில், நேற்று பிற்பகலில் சோதனை சாவடி அருகே ஒற்றைக் காட்டு யானை, உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது.
இதைக் கண்ட அப்பகுதியினர், பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கோவையில், உணவு தேடி கிராம பகுதிக்குள் உலா வந்த காட்டு யானையை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.#Coimbatore #elephant pic.twitter.com/rG38arhqM4
— Indian Express Tamil (@IeTamil) February 8, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.