Advertisment

'அப்போ எனக்கு பசிக்கும் ல': கோவையில் மாட்டு தீவனத்தை காலி செய்த யானைகள் - வீடியோ

கோவையில் மாட்டு கொட்டகையில் இருந்த தீவன பொருட்களை காட்டு யானைகள் காலி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: Elephants Empty Cow Feed CCTV Footage, viral video tamil news

watch Video: Elephants Empty Cow Feed near Coimbatore tamil news

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடிகாட்டு யானைகள் ஊர் பகுதிகளுக்குள் வருகின்றன.

சில தினங்களுக்கு முன் அதிகாலையிலேயே சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதாக தடாகம் பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சின்ன தடாகம் அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சார்ந்த விவசாயி நரசிம்மராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த இரண்டு ஆண் காட்டு யானைகள் மாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த கொட்டகையில் புகுந்து அங்கிருந்த தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோள கருதுகளை உண்டு சென்றுள்ளது. ஆனால், அவை மாடுகளை ஒன்றும் செய்யவில்லை. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதே போல் அருகில் உள்ள ரங்கசாமி, உதயகுமார் ஆகியோரின் தோட்டத்திற்குள்ளேயும் இந்த யானைகள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது. வனப்பகுதியில் இருந்து மாலை நேரத்தில் யானைகள் வெளியில் வரும் நேரத்திலேயே அவற்றை மீண்டும் வனத்திற்குள் வனத்துறையினர் விரட்டினால் மட்டுமே யானைகளால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முடியும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Elephant Viral Social Media Viral Coimbatore Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment