விவசாய நிலம் சேதம்… மடக்கி பிடிக்கப்பட்ட மக்னா யானை - வீடியோ!

பொள்ளாச்சி அடுத்த சரளப்பதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பொள்ளாச்சி அடுத்த சரளப்பதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: Makhna elephant captured from Village near Pollachi for translocation Tamil News

இன்று அதிகாலை 4 மணியளவில் மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை கபில் தேவ் கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

Coimbatore News in Tamil: ஆனைமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த சில மாதங்களாக ஆனைமலை அடுத்த சரளபதி அருகே முகாமிட்டு அங்குள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

Advertisment

இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் யானையை பிடித்து கும்கியாக மாற்ற வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அடுத்து தனி குழு அமைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை கபில் தேவ் கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். மேலும், யானை கொண்டு செல்லும் பிரதியாக வண்டியில் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்த யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை அருகே உள்ள சின்ன கல்லார் பகுதியில் விடப்படுவதாக தற்போது முதல் கட்டமாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Viral Elephant Pollachi Coimbatore Viral News Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: